
மது குடித்தால் பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் தீவிரமாக தாக்கும் என்று சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். அப்படி மார்பகப் புற்று நோய் தாக்கப்பட்ட பெண்களுக்கு, அருமருந்தாக உள்ளது திராட்சைப் பழம்!
பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை கட்டுப்படுத்தும் சக்தி திராட்சைக்கு இருப்பதால், அதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.
`ரெஸ்வெரட்டால்’ என்கிற ஒருவகை இயற்கை அமிலம் திராட்சையில் அதிகமாக காணப்படுகிறது. இந்த அமிலம் கேன்சர் செல்களின் வளர்ச்சியை தடுப்பதுடன், தேவையில்லாத கட்டிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது.
மேலும், ரத்த ஓட்டத்தை சீராக்குவதிலும், ஆங்காங்கே ரத்தம் உறைவதை தடுப்பதிலும் திராட்சை முக்கிய பங்கு வகிக்கிறது.
இவ்வளவு சிறப்புகள் கொண்ட திராட்சையை மதிய உணவுக்குப் பின் 200 மில்லி அளவுக்கு ஜூஸாக எடுத்துக்கொள்வது நல்லது என்பது இயற்கை மருத்துவர்களின் அறிவுரை. பெண்கள் மட்டுமல்ல… ஆண்களும் அதிகமாக திராட்சை சாப்பிடுவது பலவிதத்திலும் நல்லது.
No comments:
Post a Comment