Monday, February 14, 2011

ஞாபக மறதியை குணப்படுத்தும் -அறிவு வளர்க்கும் டானிக் --ஸாரஸ்வதாரிஷ்டம்


ஞாபக மறதியை குணப்படுத்தும் -அறிவு வளர்க்கும் டானிக் -ஸாரஸ்வதாரிஷ்டம்

(ref-பைஷஜ்யரத்னாவளி - ரஸாயனாதிகாரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:


1. வல்லாரை ப்ராஹ்மீ - 1.000 கிலோகிராம்
2. தண்ணிர் விட்டான் கிழங்கு ஸதாவரீ - 0.250
3. முதுக்கன் கிழங்கு விடாரீ - 0.250
4. கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ - 0.250
5. விளாமிச்சவேர் உஸீர - 0.250
6. இஞ்சி ஆர்த்ரக - 0.250
7. சதகுப்பை ஸதபுஷ்ப - 0.250
8. தண்ணீர் ஜல - 12.800 லிட்டர்


இவைகளை நன்கு கொதிக்க வைத்து 3.200 லிட்டர் ஆக்க் குறுக்கி வடிகட்டி அதில்

1. சர்க்கரை ஸர்க்கர - 1.250 கிலோகிராம்
2. தேன் மது - 0.500


இவைகளைக் கலந்து மற்றும்

1. அரேணுகம் அரேணுக - 12.500 கிராம்
2. சிவதை (கருப்பு) த்ரிவ்ருத் - 12.500
3. திப்பிலி பிப்பலீ - 12.500
4. இலவங்கம் லவங்க - 12.500
5. வசம்பு வாச்சா - 12.500
6. கோஷ்டம் கோஷ்ட - 12.500
7. அமுக்கிராக்கிழங்கு அஸ்வகந்தா - 12.500
8. தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ - 12.500
9. சீந்தில்கொடி குடூசீ - 12.500
10. ஏலக்காய் ஏலா - 12.500
11. வாயுவிடங்கம் விடங்க - 12.500
12. இலவங்கப்பட்டை லவங்கத்வக் - 12.500


இவைகளைப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ (தாதகீபுஷ்ப) 250 கிராம் சேர்த்துத் தங்க்க் குடத்தில் ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.

குறிப்பு: தங்கக் குடம் இல்லாவிடில் மற்ற கலங்களை உபயோகித்தும் தயாரிக்கலாம். அவ்விதம் உபயோகிக்கும் போது தங்கத்தின் குணம் கிடைக்க மேற்கூறிய மருந்தில் தங்கரேகத்தைச் சேர்க்க வேண்டும். 125.00 கிராம் எடையுள்ள தங்கரேக்கை வடிகட்டிய அரிஷ்டம் சிறிது சேர்த்து நன்கு கல்வத்திலிட்டரை குப்பியிலடைக்கும் தருணத்தில் கலந்து பத்திரப்படுத்தவும்.


அளவும் அனுபானமும்: 15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.


தீரும் நோய்கள்:


மூர்ச்சை (மூர்ச்சா), கால்கைவலி எனும் காக்கை வலிப்பு (அபஸ்மார), பைத்தியம் (உன்மாத), மூளைக்கோளாறுகள் (அ) மனக் கோளாறுகள் (மானஸதோஷ), திக்குவாய் போன்ற உச்சரிப்புக் கோளாறுகள், ஞாபகமறதி (ஸ்மிருதிக்ஷய), குற்றமுள்ள விந்து (சுக்ரதோஷ), தொடர்ந்து உட்கொள்ள ஞாபகசக்தியை அதிகப் படுத்துவதுடன், உடலுக்கு வலுவையும்,

சாந்தியையும் அளித்து மூளை நரம்பு மண்டலத்தை பலமாக்குகிறது. சிறந்த உடல் தேற்றி.


குறிப்பு

சாரஸ்வதா அரிஷ்டம் -பொதுவாக -தங்க பற்பம் சேர்ந்து தான் தயாரிக்கப்பட்ட வேண்டும் ..ஆனால் மார்கெட்டில் தங்கம் சேர்க்காமலும் சாரஸ்வதா அரிஷ்டம் கிடைக்கிறது ..

குறிப்பு தங்க பஸ்பம் தங்க நிறத்திலே இருக்காது ,அடர் சிவப்பு நிறம் தான் நல்ல தங்க பஸ்பம் ..தங்கம் போல் மினு மினு மினுக்கும் ஒரு பஸ்பம் ஒன்று உள்ளது ..அதை வைத்து போலி வைத்தியர்கள் தங்க பஸ்பம் என்று ஏமாற்றி வருகிறார்கள் ..அந்த தங்கம் போல் மினு மினுக்கும் பஸ்பதிலே ஒரு இம்மியேனும் தங்கம் சேராது ஆனால் அதற்க்கு பெயர் ஸ்வர்ண வங்கம்

தங்க பற்பம் சேர்ந்த சாரஸ்வதா அரிஷ்டம் தான் அறிவை வளர்க்கும் -அறிவு திறன் கூட வைக்கும் ..

தங்க பஸ்பம் மிக மிக குறைவான அளவிலே சேருவதாலும் பக்க விளைவுகள் இல்லவே இல்லை ..தாராளமாக மூன்று வயதிற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கும் ,வயது மூத்தவர்களுக்கும் பயமின்றி தொடர்ந்து கொடுக்கலாம் ..

எனக்கு தெரிந்த வகையில் இது சிறந்து அறிவு பெருக்கி ..குழந்தைகளுக்கு தேவை கருதி கொடுக்கலாம் ..பொதுவாக கொடுக்கலாம் ..

கால அளவு குறைந்த பட்சம் மூன்று மாதங்கள் -பசி ,தேக பிரகிருதி ,உடல் வன்மை ,மன வலிமை பொறுத்து அளவுகளை கூட்டவோ குறைக்கவோ செய்யவேண்டும்

டாபர் கம்பெனி சாரஸ்வதா அரிஷ்டம் தயாரிப்பில் -தங்கம் சேருவதில்லை என்று அறிகிறோம் ..

சூட்டு கட்டிகளை குணமாக்கும் - ஸாரிபாத்யாஸவம்


சூட்டு கட்டிகளை குணமாக்கும்,சர்க்கரை நோயினால் ஏற்படும் கட்டிகளுக்கும் ,சூட்டை குறைக்கவும் -- ஸாரிபாத்யாஸவம்

(பைஷஜ்யரத்னாவளி - பிரமேஹபிடஹாதிகாரம்)


தேவையான மருந்துகளும் செய்முறையும்:


1. நன்கு கொதித்து ஆறிய தண்ணீர் ஜல - 25.600 லிட்டர்
2. வெல்லம் குட - 15.000 கிலோகிராம்

இவைகளை நன்கு கலந்து அதில் திராக்ஷை (த்ராக்ஷா) 3.000 கிலோ கிராம் இடித்துச் சேர்த்து அத்துடன்,


1. நன்னாரி ஸாரிவா - 200 கிராம்
2. கோரைக்கிழங்கு முஸ்தா - 200
3. பச்சோத்திப்பட்டை லோத்ரா - 200
4. ஆலம்பட்டை நியாகுரோத - 200
5. அரசம்பட்டை அஸ்வத்தா - 200
6. கிச்சிலிக்கிழங்கு ஸட்டீ - 200
7. நன்னாரி (கருப்பு) அனந்தமூல - 200
8. பதிமுகம் பத்மகம் - 200
9. குருவேர் ஹ்ரிவேர் - 200
10. பாடக்கிழங்கு பாட்டா - 200
11. நெல்லுமுள்ளி ஆமலகீ - 200
12. சீந்தில்கொடி குடுசீ - 200
13. விளாமிச்சவேர் உஸீர - 200
14. சந்தனம் ஸ்வேதசந்தன - 200
15. செஞ்சந்தனம் ரக்தசந்தன - 200
16. ஓமம் அஜமோதா - 200
17. கடுகரோஹீணீ கடுகீ - 200
18. இலவங்கப்பத்திரி லவங்கபத்ர - 200
19. சிற்றேலம் ஏலா - 200
20. பேரேலம் ப்ருஹத் ஏலா - 200
21. கோஷ்டம் கோஷ்டம் - 200
22. சூரத்துநிலாவாரை ஸ்வர்ணபத்ர - 200
23. கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ - 200


இவைகளைப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ (தாதகீபுஷ்ப) 500 கிராம் சேர்த்து ஒரு மாதம்வரை வைத்திருந்து வடிகட்டவும்.


அளவும் அனுபானமும்:

15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.


தீரும் நோய்கள்:

பிரமேகம் (ப்ரமேஹ), பிரமேகக்கட்டிகள் (ப்ரமேஹ பிடக), பரங்கிப்புண் (உபதம்ஷ), தோல் நோய்கள் (குஷ்ட (அ) சர்மரோக) கீல்வாதம் (சந்திவாத), குதிகால் வாதம் (வாதரக்த) போன்ற வாதநோய்கள் (வாதரோக) மற்றும் ஆசனவாய் வெடிப்பு (பகந்தர).
ரத்தத்தை சுத்தி செய்யவல்லது. இது பரங்கிப் புண்ணில் (அ) பரங்கி நோயில் தேவகுஸும ரஸாயனத்துடனோ ஷட்குண ஸிந்தூரத்துடனோ தரப்படுகிறது.

கல்லீரல் மண்ணீரல் வீக்கத்தை போக்கும் -ரோஹீதகாரிஷ்டம்


கல்லீரல் மண்ணீரல் வீக்கத்தை போக்கும் -ரோஹீதகாரிஷ்டம்
(ref-பைஷஜ்யரத்னாவளி - ப்லீஹயக்ருதாதிகாரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

ரோஹித மரத்தின் படம்

1. ரோஹிதகப்பட்டை ரோஹீதக த்வக் - 5.000 கிலோகிராம்
2. தண்ணீர் ஜல - 51.200 லிட்டர்

இவைகளை நன்கு கொதிக்க வைத்து 12.800 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி வெல்லம் (குட) 10.000 கிலோ கிராம் சேர்த்து அத்துடன்,


1. திப்பிலி பிப்பலீ - 50 கிராம்
2. மோடி பிப்பலீமூல - 50 “
3. செவ்வியம் சவ்ய - 50 “
4. கொடிவேலி வேர் சித்ரக - 50 “
5. சுக்கு சுந்தீ - 50 “
6. இலவங்கப்பட்டை லவங்கத்வக் - 50 “
7. இலவங்கப்பத்திரி லவங்கபத்ர - 50 “
8. ஏலக்காய் ஏலா - 50 “
9. கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ - 50 “
10. தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ - 50 “
11. நெல்லிமுள்ளி ஆமலகீ - 50 “


இவைகளைப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ (தாதகீபுஷ்ப) 800 கிராம் சேர்த்து ஒரு மாதம்வரை வைத்திருந்து வடிகட்டவும்.


அளவும் அனுபானமும்:

10 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.


தீரும் நோய்கள்:



கல்லீரல், மண்ணீரல் வீக்கம் (யக்ருத் ப்லீகவ்ருத்தி), குன்மம் (குல்ம), பெருவயிறு (மஹோதர, உதர), பெருங்கழிச்சல் (க்ரஹணீ), மூலம் (அர்ஷ), காமாலை (காமால, காமில), வீக்கம் (அஷ்த்தீலா)
கல்லீரல் மண்ணீரல் வீக்கத்தில், நோயின் கடுமைக்கு ஏற்பவும், நோயாளியின் நிலைமை மற்றும் வயதுக்கு ஏற்பவும் ஒரு நாளைக்கு இரண்டு வேளை வீதம் இரண்டு மாதங்கள் வரை சித்ரகாதி வடி மற்றும் ஜஸத பஸ்மாவுடன் தரப்படுகிறது.

கிட்னி பைலியர்,சொரியாசிஸ் நோய்களுக்கான டானிக் - புனர்னவாஸவம்


கிட்னி பைலியர்,சொரியாசிஸ் நோய்களுக்கான டானிக் - புனர்னவாஸவம்
(ref-பைஷஜ்ய ரத்னாவளி - சோபாதிகாரம்)




தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1. நன்கு கொதித்து ஆறிய தண்ணிர் ஜல - 25.600 லிட்டர்
2. சர்க்கரை ஸர்க்கர - 5.000 கிலோகிராம்
3. தேன் மது - 2.500 “


இவைகளை நன்றாகக் கலந்து திராக்ஷை (த்ராக்ஷா) 1.000 கிலோ கிராம் இடித்துச் சேர்த்து அத்துடன்


1. சுக்கு சுந்தீ - 50 கிராம்
2. மிளகு மரீச்ச - 50 “
3. திப்பிலி பிப்பலீ - 50 “
4. கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ - 50 “
5. தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ - 50 “
6. நெல்லிமுள்ளி ஆமலகீ - 50 “
7. மரமஞ்சள் தாருஹரித்ரா - 50 “
8. நெருஞ்சில் கோக்ஷூர - 50 “
9. முள்ளுக்கத்திரி வேர் ப்ருஹத்தீ - 50 “
10. கண்டங்கத்தரி கண்டகாரீ - 50 “
11. ஆடாதொடை வேர் வாஸாமூல - 50 “
12. ஆமணக்கு வேர் ஏரண்டமூல - 50 “
13. கடுகரோஹிணீ கடுகீ - 50 “
14. யானைத்திப்பிலி கஜ பிப்பலீ - 50 “
15. மூக்கரட்டை வேர் புனர்னவ - 50 “
16. வேப்பம்பட்டை நிம்பத்வக் - 50 “
17. சீந்தில் கொடி குடூசீ - 50 “
18. உலர்ந்த முள்ளங்கி சுஷ்கமூலக - 50 “
19. சிறுகாஞ்சூரி வேர் துராலபா - 50 “
20. பேய்ப்புடல் பட்டோல - 50 “


ஆகியவைகளைப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ (தாதகீ புஷ்ப) 800 கிராம் சேர்த்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.

குறிப்பு: சர்க்கரை, திராக்ஷை ஆகியவற்றை வகைக்கு 75 சதவிகிதமும், தேன் 87 ½ சதவிகிதமும் அதிகம் சேர்ப்பது சம்பிரதாயம்.

அளவும் அனுபானமும்: 15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.


தீரும் நோய்கள்:

வீக்கம் (அ) நீர்க்கோவை (ஸோத) ஷோப), பெருவயிறு (மஹோதர, உதர), சோகை (பாண்டு), (காமால, காமில), நீர்க்கட்டு (மூத்திராசங்க); கல்லீரல், மண்ணீரல் வீக்கம் (யக்ருத்ப்லீக வ்ருத்தி).
வீக்கம், பெருவயிறு, சோகை, காமாலை போன்ற நோய்களில் புனர்னவ மண்டூரத்துடன் இது கலந்துதரப்படுகிறது. கோக்ஷூராதி சூர்ணத்துடனும் இது கொடுக்கப்படுகிறது.

இது ஒரு நல்ல சிறுநீர் பெருக்கியாகும்.

கிட்னி பைலியர் நோயாளிகள்-
புனர்ணவாஸவத்தில் இனிப்பு உள்ளது -பெரும்பான்மையான கிட்னி பைலியர் நோயாளிகளுக்கு சர்க்கரை நோய் உள்ளதால் -மிக மிக கவனத்துடன் தருவது நல்லது ..கிட்னி பைலியர் நோயாளிகள் இந்த மருந்தை தக்க படித்த ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனை படி தான் இந்த மருந்தை எடுக்க வேண்டும் ..
தனியாக சாப்பிட கூடாது ..

(கிட்னி பைலியர் நோயாளிகள் பூனை மீசை என்ற மூலிகையை கொடுத்து ஓரளவுக்கு அவர்களின் உப்பு சத்தை டயாலிசிஸ் இல்லாமல் சரிசெய்ய முடிகிறது ..
இந்த மூலிகையின் முழு விவரம் விரைவில் எழுதுகிறேன் ..)





எனது அனுபவத்தில் இந்த புனர்ணவாஸவத்தை அடிக்கடி தோல் நோய் குறைக்க பயன்படும் ஆயுர்வேத மாத்திரையுடன் சாப்பிட்டு வர மிக கொடுமையான சொரியாசிஸ் நோய் குணமாவதை கண் கூடாக பார்த்திருக்கிறேன் ..

No comments:

Post a Comment