Tuesday, October 26, 2010

இறால்

பிரான் சப்ஜி சேமியா பிரியாணி - prawn vej semiya biriyani




தேவையான பொருட்கள்


இறால் = கால் கிலோ
சேமியா = கால் கிலோ
உருளை கிழங்கு = 1 (சிறியது)
கேரட் = 1 (சிறியது)
பட்டாணி = ஒரு மேசை கரண்டி
சோளம் = ஒரு மேசைகரண்டி (புரோஷன்)
பீன்ஸ் = ஐந்து
இஞ்சி பூண்டு பேஸ்ட் ‍ = இரண்டு தேக்கரண்டி
வெங்காயம் = இரண்டு
தக்காளி = இரண்டு
கொத்து மல்லி தழை = சிறிது
புதினா = சிறிது
எண்ணை = முன்று மேசைகரண்டி
நெய் (அ) டால்டா) = ஒரு தேக்கரண்டி (சேமியா வறுக்க)
பச்ச மிளகாய் = ஒன்று
மிளகாய் தூள் = ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் = ஒரு பின்ச்
உப்பு = தேவைக்கு
ப‌ட்டை = அரை அங்குல‌ அளவு
ஏல‌ம் = ஒன்று
கிராம்பு = இர‌ண்டு








செய்முறை

இறாலை சுத்தம் செய்து வயிற்றிலும்,முதுகிலும் உள்ள அழுக்கை கீறி எடுத்து விட்டு அரைதேக்கரண்டி வினிகர் ஊற்றி இரண்டு நிமிடம் ஊறவைத்து கழுவி தண்ணீரைவடித்து வைக்கவும்.






சேமியாவை நெய் (அ) டால்டா ஒரு தேக்கரண்டி சேர்த்து கரியாமல் சிவற வருத்து வைக்கவும்.

காய் க‌றிக‌ளை ந‌ன்கு க‌ழுவி அரிந்து வைக்க‌வும்.




சட்டியை காயவைத்து எண்ணை ஊற்றி பட்டை,கிராம்பு, ஏலம் போட்டு வெடிய விட்டு வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

பிறகு இஞ்சி பூண்டு பெஸ்ட் போட்டு பச்சை வாடை போகும் வதக்கவும்.

கொத்து மல்லி, புதினா சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

தக்காளியை பொடியாக நருக்கி சேர்த்து, பச்சமிளகாயும் போட்டு தீயின் அனலை சிம்மில் வைத்து வேக விடவும்.




தக்காளி மசிந்ததும் இறால், அரிந்து வைத்திருகும் காய்கள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் ,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்


காய், ம‌ற்றும் இறால் வெந்து ந‌ல்ல‌ கூட்டு போல் எண்ணை தெளிந்து மேலே வ‌ரும், தீயை சிம்மிலேயே வைக்க‌வும்.









வெந்த‌தும் சேமியா ஒன்றுக்கு ஒன்னறை பங்கு தண்னீர் ஊற்றி கொதிக்க விட்டு சேமியாவை போட்டு அடி பிடிக்காமல் கிளறி கொஞ்சமா இருக்கும் போது அடுப்பை அனைத்து விடவேண்டும்.அந்த சூட்டிலீயே இருக்கி தம் ஆகிவிடும்.






புதினா சட்னி, நார்த்தங்காய் ஊறுகாய், இஞ்சி டீயும்.
தொட்டுக்க நல்ல இருக்கும்


குறிப்பு:



அப்படி வெளியில் கட்டி கொண்டு போவதா இருந்தால் தண்ணீர் கொஞ்சம் கூடுதல ஊற்றி கொள்ளுங்கள். இறாலை முதலே போட்டு விட்டால் ரப்பர் மாதிரி ஆகிவிடும். இறலுடன் கேரட் சேர்த்தால் சுவை அதிகம், இறால் சூடு அது கேரட் சேரும் போது ஒன்றும் ஆகாது.



இஸ்லாமிய இல்ல விஷேஷங்களில், கல்யாணங்களில் மட்டன் சேமியா பிரியாணி ரொம்ப பேமஸ் அதை இறாலில் இங்கு செய்து உள்ளேன்,

மட்டனாக இருந்தால் வேகும் நேரம் கொஞ்சம் அதிகமாகும், இதை சிகக்னிலும் செய்யலாம். காலை டிபனுக்கு முட்டையிலும் செய்யலாம்.
காய்கறிகள் மட்டும் சேர்த்தும் செய்யலாம்.

இறால் தலை மற்றும் இறால் பஜ்ஜி


இங்கு (துபாயில்) அதிகமாக கிடைப்பது பெரிய ராஜ இறால் தான். அந்த பெரிய் தலைய் தூக்கி போட மனசு வரல. ஆகையால் பஜ்ஜியா சுட்டுவிட்டேன்.
இறால தலைய குழம்பில் சேர்த்தாலும் , சூப் வைத்தாலும், மொரு மொருவென வறுத்தாலும் ருசியாக இருக்கும் , ஆனால் இறாலை சுத்தம் செய்வதே பெரிய வேலை அதை தலையையும் சுத்தம் செய்ய சோம்பல் பட்டு சில நேரம் சிறியதாக இருந்தால் ஒன்றிரண்டுமட்டும் ஆய்ந்து விட்டு தூக்கி போட்டு விடுவேன். ஆனால் தலையே நல்ல இரண்டு இன்ச் அளவுக்கு இருந்த்து.
இறாலை தோலுரித்து முதுகிலும் வயிற்றிலும் உள்ள அழுக்கை அகற்றவும். தலையில் நீட்டாக உள்ள குச்சிகளை கத்திரியால் கட்பண்ணவும்,. அழுக்கு போக சுத்தம் செய்து நன்கு கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும்.




பஜ்ஜி கலவைக்கு

கடலை மாவு – முன்று சூப் ஸ்பூன் அள்வு
மைதா மாவு – ஒரு சூப் ஸ்பூன் அளவு
அரிசி மாவு – ஒரு சூப் ஸ்பூன் அளவு
காஷ்மீரி சில்லி பொடி – முக்கால் டீஸ்பூன்
உப்பு – ருசிக்கு தேவையான அளவு (முக்கால் டீஸ்பூன்)
ரெட் கலர் பொடி – ஒரு சிட்டிக்கை
இட்லி சோடா – ஒரு சிட்டிக்கை
இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஓரு டீஸ்பூன்



இறால் மற்றும் இறால் தலையில் சேர்க்கவேண்டிய மசாலாக்கள்
இறால் – 10 பெரியது
மிளகாய் தூள் – ஒரு ஒன்னறை தேக்கரண்டி
உப்பு – அரை தேக்க்ரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி



செய்முறை
1. இறால் மற்றும் இறால் தலையை சுத்தம் செய்து சேர்க்க வேண்டிய மசாலாக்களை சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
2. பஜ்ஜி கலவைக்கு கொடுத்துள்ள பொருட்களை நன்கு கட்டியாக கரைத்து ஊறவைத்த இறால் தலை மற்றும் இறாலை டிப் செய்து டீப் பிரை செய்யவும்.
குறிப்பு:
பஜ்ஜி வகை குறிப்புகள் ஏற்கனவே நிறைய கொடுத்துள்ளேன், இறால் சிக்கன், முட்டை செய்யும் போது மைதா சேர்ப்பதால் நன்கு கோட் ஆகும், காய் கறி வகைகளுக்கு மைதா சேர்க்கனும் என்று அவசியம் இல்லை லேசாக பிரட்டி போட்டாலே போதும்.மைதா சேர்ப்பதால் நல்ல ஷாப்டாகவும் புஸுன்னும் இருக்கும்.

இறால் பாஸ்தா/prawn pasta


தேவையான‌வை

இறால் = 10 மீடியமானது
பாஸ்தா = இர‌ண்டு ட‌ம்ள‌ர்
எண்ணை = முன்று தேக்க‌ர‌ண்டி
வெங்காயம் = இரண்டு
இஞ்சி பூண்டு பேஸ்ட் = இர‌ண்டு தேக்க‌ர‌ண்டி
தக்காளி = முன்று
பச்சமிளகாய் = ஒன்று
கொத்து ம‌ல்லி , புதினா த‌ழை = சிறிது
தேங்காய் ப‌வுட‌ர் = முன்று தேக்க‌ர‌ண்டி
முந்திரி = முன்று
உப்பு = தேவைக்கு
மிள‌காய் தூள் = முக்கால் தேக்க‌ர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் தூள் = சிறிது


செய்முறை



விரும்பிய வடிவ‌ பாஸ்தாவை தனியாக குக்கரில் ஒரு ஸ்பூன் எண்ணை சிறிது உப்பு போட்டு வேகவைத்து வடித்து வைக்கவும்/


தனியாக வாயகன்ற வானலியில் இறாலை தாளிக்கவும்.
எண்ணை விட்டு பட்டை சேர்த்து வெங்காயம் வதக்கி , இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு பச்சவாடை போக வதக்கி, கொத்துமல்லி, புதினா, தக்காளி, பச்சமிளகாய் சிறிது உப்பு போட்டு தக்காளியை மசிய விடவும்.


அடுத்து இறால்,மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,தேவைக்கு மீண்டும் சிறிது உப்பு தூள் சேர்த்து தீயின் தனலை குறைத்து வைத்து கிரேவி கிரிப்பாக விடனும்.


பிறகு வடித்து வைத்த பாஸ்தாவை சேர்த்து தேங்காய் பவுடருடன் முந்திரி சேர்த்து அரைத்து ஊற்றி கொதிக்க விட்டு சிறிது தண்ணீர் போல இருக்கும் போதே இரக்கி விட வேண்டும்.ஆறியதும் கெட்டியாகிடும்.




குறிப்பு




இது இறாலில் செய்வதால் தனித்தனியாக வேகவைக்கனும் இறால் வேகும் நேரம் குறைவே, ரொம்ப வெந்தால் ரப்பர் போல் ஆகிடும்குக்க‌ரில் நிமிஷ‌த்தில் செய்து விட‌லாம், ஆனால் சிக்க‌ன், இறாலை த‌னித்த‌னியாக‌ தான் செய்ய‌னும்.




ம‌ட்ட‌ன் இது எல்லாத்தையும் குக்க‌ரிலேயே ஏற்றிடலாம் செய்முறை சிறிது மாறும்/


குழ‌ந்தைக‌ளுக்கு செய்வதாக‌ இருந்தால் நூடுல்ஸ் டைப்பில் செய்ய்யலாம்.


த‌க்காளிக்கு ப‌தில் த‌க்காளி பேஸ்ட், கெட்ச‌ப் போட்டு செய்து கொடுக்க‌லாம்,


இறால் சேப்பங்கிழங்கு வறுவல்



தேவையான பொருட்கள்


இறால் = 12
சேப்பங்கிழங்கு = 2
காஷ்மிரி மிளகாய் தூள் = அரை தேக்கரண்டி
உப்பு ‍= அரைதேக்கரண்டி (தேவைக்கு)
இஞ்சி பூண்டு பேஸ்ட் = ஒரு தேக்கரண்டி
க‌ருவேப்பிலை = சிறிது
எண்ணை = முன்று தேக்க‌ர‌ண்டி









செய்முறை


இறாலை தோலெடுத்து முதுகிலும் வயிற்றிலும் உள்ள அழுக்கை எடுத்து வினிகர் ஊற்றி கழுவி எடுக்கவும்
சுத்தம் செய்த இறாலில் காஷ்மீரி மிளகாய்தூள்,உப்பு, இஞ்சி பூண்டு,சேர்த்து பிரட்டி 10 நிமிடம் ஊறவைக்கவும்.
சேப்ப‌ங்கிழங்கை தோலெடுத்து பொடியாக அரிந்து இறாலுடன் சேர்த்து பிசறி வைக்கவும்.
கனமான இரும்பு வானலியில் இரண்டு தேக்க்கரண்டி எண்ணை விட்டு சிறிய பட்டை, கருவேப்பிலை போட்டு தாளித்து இறால் சேப்பங்கிழங்கை சேர்த்து நன்கு வறுத்து ஐந்து நிமிடம் சிம்மில் வைக்கவும்.
க‌டைசியாக‌ ஒரு தேக்க‌ர‌ண்டி எண்ணை விட்டு மேலும் வ‌றுத்து இர‌க்க‌வும்.

குறிப்பு

காஷ்மீரி சில்லி என்பது நல்ல சிகப்பு நிறத்தில் இருக்கும்.



காஷ்மீரி சில்லி என்பது நல்ல சிகப்பு மிளகாய் தூள் ஆனால் காரம் இருக்காது. இல்லை என்றால் சாதா மிளகாய் தூள்+கொஞ்சம் ரெட் கலர் சேர்த்து கொள்ளலாம்.


இறாலை பலவகையாக மசாலாக்கள் போட்டு வறுக்கலாம் அதில் இது ஒரு வகை

பிரான் பிரட் ரைஸ் - Prawn Fried Rice



தேவையான பொருட்கள்.

தரமான பாசுமதி அரிசி - அரை கிலோ
இறால் - 150 கிராம்
காய் கறிகள் - 200 கிராம்
(கேபேஜ்,கேரட், கேப்ஸிகம்,பீஸ்,பீன்ஸ்)
வெங்காய தாள் - இரண்டு ஸ்ட்ரிப்ஸ்
பூண்டு - முன்று பெரிய பற்கள்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை + ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று + ஒன்று
கிரீன் சில்லி பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி (அ) பச்ச மிளகாய் - 2
சர்க்கரை - அரை தேக்கரண்டி
மேகி கியுப் - ஒன்று
சோயா சாஸ் - ஒரண்டு தேக்கரன்டி
வெயிட் பெப்பர் பொடி - ஒரு தேக்கரண்டி
பிளாக் பெப்பர் பொடி- இரண்டு தேக்கரண்டி முட்டை - முன்று
உப்பு - தேவைக்கு
எண்ணை - முன்று மேசை கரண்டி
பட்டர் - முன்று மேசை கரண்டி
டொமேடோ கெட்சப் - ஒரு மேசை கரண்டி



செய்முறை


1. தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக வைக்கவும்.இறாலை தோலெடுத்து வயிற்றிலும், முதுகிலும் உள்ள அழுக்குகளை எடுத்து நன்கு கழுவி தண்ணீரை வடித்து அதில் அரை தேக்கரண்டி இஞ்சி பூண்டு கால் தேக்கரண்டி உப்பு, கால் தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து ஊற வைக்கவும்.மற்ற காய் கறிகள் அனைத்தியும் அரிந்து ரெடியாக வைக்கவும்.


2.முட்டையில் மிளகு தூள், உப்பு தூள் சேர்த்து அடித்து வைக்கவும், அரிசியை பத்து நிமிடம் ஊற வைக்கவும்.


3.ரைஸ் குக்கர் (அ) குக்கரில் ஒரு மேசை கரண்டி எண்ணை + ஒரு மேடை கரண்டி பட்டர் சேர்த்து காய் வைத்து ஒரு வெங்காயம், பொருதேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்து வதக்கி மேகி கியுபில் கொஞ்சம் உடைத்து போட்டு, ஒரு தேக்கரண்டி சோயா சாஸும் ஊற்றி கிளறவும்.


4. எல்லாம் ஒன்று சேர இரண்டு நிமிடம் வதக்கவும். வதக்கி அதில் ஒரு டம்ளர் அரிசிக்கு அதே போல் ஒரு டம்ளர் தண்ணீரும், கூட அரை டம்ளரும் சேத்து ஊற்றி சிறிது உப்பு சேர்த்து வேகவிடவும்.ரைஸ் குக்கர் என்றால் பதமாக வந்து விடும் கீப்பில் வந்ததும் இரக்கி வைத்து கொள்ள வேண்டும்.குக்கர் என்றால் தண்ணீர் ஊற்றியதும் கொதிக்க விட்டு வெயிட் போட்டு முன்றவது விசில் வரும் சமயம் இரக்கி விட வேண்டும்.


5.இப்போது காய் தாளிக்க வேண்டும், இரண்டு மேசை கரண்டி பட்டர் + ஒரு மேசை கரண்டி எண்ணை விட்டு காய்ந்ததும் சர்க்கரை,பூண்டை பொடியாக அரிந்து போட்டு , பசமிளகாய் பேஸ்ட் (அ) பச்சமிளகாய் பொடியாக அரிந்து சேர்த்து கிளறவும். 6. .வெங்காயம் ஊறவைத்த இறாலை போட்டு வதக்கவும்.

7.அடுத்து பொடியா கட் பண்ணி வைத்துள்ள அனைத்து காய் கறிகளையும் சேர்த்து கிளறவும்.

8. முட்டையை எண்ணை சிறிது பட்டர் சேர்த்து பொரித்து வைத்து கொள்ளவேன்டியது.

9.காய் கறியில் மீதி உள்ள மேகி கியுப்,சிறிது உப்பு,சோயா சாஸ், வொயிட் பெப்பர், பிளாக் பெப்பர், டொமேடோ சாஸ் எல்லாம் சேர்த்து நன்கு வதக்கவும்.


10.இப்போது வதக்கி வைத்துள்ள காய் ரெடி, ரைஸ் குக்கரில் உள்ள சாதமும் ரெடி, பொரித்த முட்டையை கொத்தி கொள்ளவும். 11.முதலில் காய் கறி களை போட்டு சாதம் உடையாமல் கிளறவும்.




10.இப்போது வதக்கி வைத்துள்ள காய் ரெடி, ரைஸ் குக்கரில் உள்ள சாதமும் ரெடி, பொரித்த முட்டையை கொத்தி கொள்ளவும். 11.முதலில் காய் கறி களை போட்டு சாதம் உடையாமல் கிளறவும்.


12. அடுத்து முட்டையையும் சேர்த்து கிளறவும்.


13.கடைசியாக தேவை பட்டால் உப்பு சரி பார்த்து தேவைக்கு உப்பு, மிளகு தூள்,சிறிது பட்டரை உருக்கி ஊற்றி நன்கு கிளறி இரக்கவும், சுவையான சூப்பரான பிரான் பிரைட் ரைஸ் ரெடி.


14.இதற்கு தொட்டு கொள்ள வெங்காயம் இறாலுடன் சேர்த்து சாப்பிடவும்


குறிப்பு



இது செய்வது ரொம்ப சுலபம் உதிரியான சாதம், வதகிய காய்கறிகள் வித் சிக்கன் (அ) இறால், முட்டை/ஆனால் சிலருக்கு உதிரியாக வராது சாதம் உதிரியாக வர தன் கீ ரைஸ் போல் ஆனால் கொத்து மல்லி புதினா, பச்ச மிளாகாய்,தயிர் இல்லாமல் லைட்டாக தாளித்து சாதம் ரெடி செய்யனும்.



உப்பு விஷியத்தில் ரொம்ப கவனம் தேவை.சோயா சாஸ், மேகி கியிபில் உப்பு இருக்கும் ஆகையால் எல்லாத்துக்கும் உப்பு சுவையும் சேரனுமே என்று கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து கொள்ளவும்.



இதை சிக்கனிலும் செய்யலாம்.

இறால் வெள்ளையாக வரட்டினால் சில பேருக்கு பிடிக்காது ஆகையால் சிறிது மிளகாய் தூள் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு ஊறவைப்ப‌து.

பிரைட் ரைஸ் என்றாலே சிறிது அஜினமோட்டோ சேர்ப்பார்கள், நான் அதை பயன் படுத்துவதில்லை, இந்த முறை ரொம்ப நீளமாக இருந்தாலும் சுவை

No comments:

Post a Comment