Monday, September 27, 2010

விநாயகர் கவசம்

vinayagar kavasm

விநாயகர் கவசம்

இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் புனித ரமலான் வாழ்த்துக்கள்

****************

காசிப
முனிவர் அருளிய விநாயகர் கவசம்


தலைமுடி, நெற்றி, புருவம், இணைவிழிகள் காக்க:
வளர்சிகையைப் பராபரமாய் வயங்கு
விநாயகர் காக்க வாய்ந்த சென்னி
அளவுபடா அதிகசவுந் தரதேக
மகோற்கடர்தாம் அமர்ந்து காக்க
விளரறநெற் றியை என்றும் விளங்கிய
காசிபர்காக்க புருவந் தம்மைத்
தளர்வில் மாகோ தரர்காக்க
தடவிழிகள் பாலசந் திரனார் காக்க !!

உதடு, நாக்கு, முகவாய்க்கட்டை, வாக்கு, பல், காது, மூக்கு காக்க:
கவின்வளரும் அதரம் கசமுகர் காக்க
காலங்கணக் கிரீடர் காக்க
நவில்சிபுகம் கிரிசைகார் காக்க
நனிவாக்கைவிநா யகபுதாம் காக்க
அவிர்நகை மின் முகர் காக்க
அள் எழிற் செஞ் செவிபாச பாணி காக்க
தவிர்தலுரு திளங் கொடிபோல் வளர்மணி
நாசியைச் சிந்தி தார்த்தர் காக்க !!

முகம், கழுத்து, இணையான தோள்கள், உள்ளம், வயிறு
காக்க:
காமருபூ முகந்தன்னைக் குணேசர்
நனி காக்ககளக் கணேசர் காக்க
வாமமுறும் இருதோளும் வயங்குகந்த
பூர்வசர் தாம்மகிழ்ந்து காக்க
ஏமமுறு மணிமுலை விக்கின விநாசன் காக்க
இதயந் தன்னைத் தோமகலுங் கணநாதர் காக்க
அகட்டினைத் துலங்கே ரம்பர் காக்க !!

பக்கங்கள், தொண்டை காக்க:
பக்கம் இரண் டையுந்தரா தரர்காக்க
பிருட்டத்தைப் பாவம் நீக்கும்
விக்கினகரன் காக்க விளங்கிலிங்கம்
வியாளபூ டணர்தாம் காக்க
தக்ககுய்யந் தன்னைவக் கிரதுண்டர் காக்க
சகனத்தை அல்லல் உக்கண பன் காக்க
ஊருவை மங் களமூர்த்தி உவந்து காக்க

முழங்கால்கள், இருகால்கள், இருகைகள், முன்கைகள்
காக்க:
தாள்முழந்தாள் மகாபுத்தி காக்க
இரு பதம்ஏக தந்தர் காக்க
வாழ்கரம் க்ஷிப்பிரப் பிரசாதனர் காக்க
முன்கையை வணங்கு வார்நோய்
ஆழ்தரச்செய் ஆசாபூரகர் காக்க
விரல்பதும அத்தர் காக்க
கேழ்கிளரும் நகங்கள்விநா யகர் காக்க
கிழக்கினிற் புத்தீசர் காக்க !!

திக்குகள் அனைத்திலிருந்தும் காக்க:
அக்னியில் சித்தீசர் காக்க
உமா புத்திரர்தென் திசைகாக்க
மிக்கநிரு தியிற்கணே சுரர் காக்க
விக்கினவர்த்தனர்மேற் கென்னுந்
திக்கதனிற் காக்க
வாயுவிற் கசகர் ணன்காக்க
திகழ்உதீசி தக்கநிதி பன்காக்க
வடகிழக்கில் ஈசநந் தனரே காக்க !!

பகல், இரவு முதலிய காலங்களில் பிற தொல்லைகளிலிருந்தும் காக்க:
ஏகதந்தர் பகர்முழுதும் காக்க
இர வினும்சுந்தி இரண்டன் மாட்டும்
சையின் விக் கினகிருது காக்க
இராக் கதர்பூதம் உருவேதாளம்
மோகினிபேய் இவையாதி உயிர்திரத்தால்
வருந்துயரம் முடிவிலாத
வேகமுறு பிணிபலவும் விலக்குபு
பாசாங்குசர்தாம் விரைந்துகாக்க !!

மானம், புகழ் முதலியவற்றையும் உற்றார், உறவினரையும் காக்க:
மதிஞானம் தவந்தரன ம்மானம் ஒளி
புகழ்குலம் வண்சசரீரம் முற்றும்
பதிவான தனம்தானியம் கிருதம்
மனைவி மைந்தர் பயில்நட் பாதிக்
கதியாவும் கலந்து சர்வா யுதர்காக்க
காமர்பவுத் திரர் முன் னான
விதியாரும் சுற்றமெல்லாம் மயூரேசர்
எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க !!


படிப்போர் நோயற்றவராய் வாழ்வார்:
வென்றி சீவிதம் கபிலர் காக்க
கரி யாதியெல்லாம் விகடர் காக்க
என்றிவ்வா றிதுதனை முக்காலமும்
ஓதிடினும் பால் இடையூறொன்றும்
ஒன்றுறா முனிவரவர்காள் அறிமின்கள்
யாரொருவர் ஓதினாலும்
மன்ற ஆங் கவர்தேகம் பிணியற வச்
சிரதேக மாகி மன்னும் !!

No comments:

Post a Comment