Monday, October 18, 2010

கஸ்தூரி மஞ்சள் - .[Curcuma aromatica]


கஸ்தூரி மஞ்சள் என்று காடுகளில் தானாகவிழையும் & பயிரிடப்படும் இனமும் உண்டு.[Curcuma aromatica] இதன் குணத்தினால் அழகு,நறுமணம் தரும் பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகள்,வாசனைப்பொருட்கள், சோப்புகள், தைலங்கள் தயார்செய்யப்படுகின்றன. மற்றபடி மஞ்சள்
போன்றே இதன் குணங்களும் அமைந்துள்ளன.

மிகச்சிறந்த கிருமி நாசினியான மஞ்சள் கல்லீரலை பலப்படுத்தும், குடல் புண்களை குணமாக்கும்,பசியை கொடுக்கும், சுவையின்மை போக்கும், வீக்கம் கட்டிகளை கரைக்கும்,குடற்ப்புழுக்களை அழிக்கும், தோல் நோய்கள் குணப்படுத்தும்.[Urticaria,Chronic skin eruptions ]

மஞ்சள் மதுமேகம்,காமாலை,குடற்புண் போன்றநோய்களுக்கு
தரப்படும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.

வெளிப்புறமாக பயன்படுத்தும்போது கற்றாழைவாசம் வீசும்
வியர்வை நாற்றத்தையும்,தோல் நோய்களையும் குணமாக்கும்.
முகப்பருக்களை நீக்க உதவும்.

வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து புண்கள் மீது போடலாம்.

சமையலில் சேர்க்கப்படும் மஞ்சள் நிறம் சுவை மட்டுமின்றி ஜீரணத்தை எளிதாக்கி உணவில் நச்சுத்தன்மை இருந்தால் அதையும் நீக்குகிறது. இலங்கை மக்கள் அதிக அளவில் உணவில் மஞ்சளை சேர்த்துக்கொள்வதால் புற்றுநோயின் சதவிகிதம் அங்கு குறைவாக உள்ளதென ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.[curcuma]

கால் ஆணிக்கு = கொஞ்சம் மஞ்சள்+வசம்பு கொஞ்சம்+மருதானி இலை +கற்பூரம் சிறிது, இவைகளை அரைத்து காலாணிக்கு கட்டிவர குணமாகும்.

பாலில் மஞ்சள்+மிளகு+பூண்டு சேர்த்து காய்ச்சி குடித்துவர சளி,இருமல் குறையும். மஞ்சளை நெய்யில் கலந்து கொடுத்தாலும் இருமல் குறையும்.முகப்பருக்களையும், அழகைக்குறைக்ககூடிய இடங்களில் ஏற்ப்படும் ரோமங்களையும் நீக்கும் தன்மை இதற்கு உள்ளதால் மஞ்சள் முகப்பூச்சு கிரீம்களில் அதிக இடம்பிடிக்கிறது.
1868 ஆம் ஆண்டு முதற்க்கொண்டே மஞ்சள் பற்றிய அறிவியல் ஆராய்ச்சி மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.

எந்தஒரு காரியம் துவங்கும்போதும் மஞ்சள் அல்லது சாணத்தில் பிள்ளையார் பிடித்து அருகம்புல்லை குத்தி பூஜை செய்வது தமிழர் வழக்கம். இதற்கு விஞ்ஞான காரணமென எடுத்துக்கொண்டால் மஞ்சள், மாட்டுசாணம், அருகம்புல் எல்லாமே சிறந்த கிருமிநாசினியாகும்.
தத்துவமாக பார்த்தால் அருகு போல் வேறூன்றிஆல்போல் தழைத்து வாழ்கவென வாழ்த்துப்பா வில் கூறுவர்[அருகு எளிதில் எல்லா இடத்தில் ஆழமான வேர்களுடன் படரக்கூடியது ஆல மரம் பரந்துவிரிந்து விழுதுகளால் விருந்தோம்பி நீண்டநாள் நிலைக்கக்கூடியது.

இதே போல் மஞ்சளும் மங்களகரமாண எல்லாக்காரியங்களிலும் பண்டையகாலம் தொட்டே பயன்படுத்தப்படுகிறது.அதன் நிறம் மணம் சுவை குணம் பற்றி நம் முன்னோர்கள் தெளிவாக அறிந்திருந்தனர்.

No comments:

Post a Comment