Saturday, October 16, 2010

0101

ஸ்பெசல் பெங்களூர் பிரியாணி


தேவையானப் பொருட்கள்:
சிக்கன் – 1 கிலோ
அரிசி – 1 கிலோ
எண்ணை – 100 கிராம்
நெய் – 150 கிராம்
பட்டை பிரியாணி இலை,கிராம்பு,ஏலக்காய் -தேவையான அளவு
வெங்காயம் – 500 கிராம்
தக்காளி -500 கிராம்
இஞ்சி – 11/2 ஸ்பூன்
பூண்டு – 11/2 ஸ்பூன்
கொ. மல்லி தழை-1 கப்
புதினா – 11/2 கப்
ப. மிள்காய் – 5
தயிர் – 1கப்
சிகப்பு மிளகாய் தூள் – 11/2 டீஸ்பூன்
மஞ்சள் போடி – 1/2 டீஸ்பூன்
தணியா பொடி-1 டீஸ்பூன்
கலர் பொடி – 1 சிட்டிகை
எலுமிச்சை பழம் – 1
நெய் – ஒரு டீஸ்பூன்
செய்முறை:
ஓர்பெரியசட்டில் எண்ணையும் நெய் ஊற்றி பாதி வெங்காயம் போட்டு பொந்நிறமாக பொரிக்கவும் அதனை தணியாக எடுத்து வைக்கவும்
பின் அதில் பட்டை , கிராம்பு பிரியாணி இலை ஏலக்காய் .போட்டு பொரிந்ததும் இஞ்சி பூண்டு போட்டு வதங்கியதும் வெங்காயம் போட்டு நன்றாக கிளறவும் பிறகு பாதி கொ . மல்லி புதினா வை போட்டு கிளறவும்.
ப.மிளகாய் மிளகாய் தூள், மஞ்சல் தூள், உப்பு தேவையான் அளவு போட்டு வதங்கியவுடன் சிக்கன் தயிர் தனியாபொடி,1/2 மூடி எலுமிச்சைசாறு தக்காளி மீதிகொமல்லிபுதினாபோட்டுவேகவிடவும்
சிக்கன் நன்குவெந்த்தும் எண்ணைய்மேல்வரும்போது 1கப் அரிசிக்கு 11/2கப்சூடுநீர்ஊற்றிகொதிக்கவிடவும்
தண்ணீர் நன்கு கொதித்ததும் கலர் பொடி உப்பு போடவும்
அரிசியை 20 நிமிடம் முன்பே ஊறவைத்து நன்குவடிகட்டவும்
அரிசியை போட்டு நன்கு கிளரவும்
அரிசிபாதிவேகும்வரைதீயை அதிகமாகவைக்கவும்
முக்கால்பகுதிவெந்தவுடன்தீயைசுருக்கவும்பாதி எலுமிச்சைஜீஸ்ஊற்றவும்
சட்டி்யை சுற்றிலும் துணிகட்டி தம்மில் போடவும்
10 நிமிடங்கள் கழித்து சுவையான பிரியாணி ரெடி
சூடாக ராய்தா எண்ணை கத்திரிக்காயுடன் பரிமாறவும்

ராகிபுட்டு பயறு


தேவையானப் பொருட்கள்:
ராகிமாவு – கால் கிலோ
தண்ணீர் – 250 மில்லி
பாசிப்பயறு – கால் கிலோ
தேங்காய் – ஒன்று (சிறியது)
உப்பு – தேவைக்கு
செய்முறை:
முதலில் தேவையானவைகளை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ராகி மாவை தேவையான அளவு தண்ணீர் தெளித்து, தேவைக்கு உப்பு சேர்த்து விரவவும்.
விரவி வைத்த மாவை அப்படியே சிறிது நேரம் வைத்திருக்கவும். தேங்காயை துருவி வைக்கவும்.
மாவை மிக்ஸியில் பெரிய கப்பில் போட்டு மூன்று சுற்று சுற்றி எடுக்கவும். இதைப் போல் மாவு முழுவதையும் மூன்று முறையாக சுற்றி எடுக்கவும். இப்பொழுது மாவு பூப்போல ஆகிவிடும்.
பாசிப்பயறை வேக வைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும்.
புட்டுக்குழலில் முதலில் தேங்காய் துருவலை வைத்து பின்பு மாவை வைத்து நிரப்பவும். அதன் மேல் மீண்டும் தேங்காய் துருவலை வைத்து நிரப்பவும்.
குக்கரில் தண்ணீர் வைத்து கொதிவந்ததும் அதில் புட்டுக்குழலை வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
சுவையான, சத்தான ராகிபுட்டு தயார். இதனை வேக வைத்த பாசிப்பருப்புடன் பரிமாறவும். சீனி மற்றும் தேங்காய் துருவலுடன் சாப்பிடலாம். சீனி விரும்பாதவர்கள் அப்படியே சாப்பிடலாம்.

No comments:

Post a Comment