Friday, October 15, 2010

கொள்ளு அல்லது காணம்


இதன் விதை குதிரைகளுக்கு தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை உணவாகவும் பயன்படுத்துவர். கல்லடைப்பு, இருமல் போன்றவற்றை கொள்ளு குணப்படுத்தும். இதை உட்கொள்ள உடலில் தேவையில்லாத சதைகள் குறவைதுடன் உடல் மெலியும்.
கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல், கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும். வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும்.
கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.

No comments:

Post a Comment