Saturday, October 16, 2010

உடைந்த எலும்புகளை ஒட்ட வைக்கும் பசை

மருத்துவத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே வருகின்றன. அறுவை சிகிச்சை இல்லாமல் நவீன முறையில் பல்வேறு நோய்களை குணப்படுத்தப்படுத்தக்கூடிய நிலை இன்று சாத்தியமாகி இருக்கிறது.
உறுப்பு மாற்றம், செயற்கை உறுப்புகள் போன்றவை மருத்துவத்துறையை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளன. மிக எளிதாக நவீன முறையில் சிகிச்சை அளிக்க பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்ட வண்ணம் உள்ளன.
அந்த வரிசையில், கடலில் வாழும் ஒருவகையான பூச்சியின் உடலில் இருக்கும் ஒருவிதமான பசையைக் கொண்டு உடைந்த எலும்புகளை ஒட்ட வைக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கடலில் வாழும் சான்ட்கேஸ்ட்லி எனப்படும் மிகச்சிறிய பூச்சிகள் தங்களுடைய உடலில் பசை போன்ற திரவத்தை ஒளித்து வைத்திருக்கின்றன. நீண்டகால ஆராய்ச்சிக்குப் பிறகு, அந்தப் பசையானது மருத்துவத்துறைக்குப் பயன்படும் எனத் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக, உடைந்த எலும்புகளை ஒட்ட வைத்தல், ஒழுங்கற்ற எலும்புகளை சரி செய்தல் போன்றவற்றிற்குப் பயன்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனுடைய தொடக்க சோதனையில், இந்த பசை மூலம் சிகிச்சை பெற்றவர்கள் முன்பைவிட அதிக பலத்துடன் செயல்படுவதாக தெரிய வந்துள்ளது.
ஈரமான பகுதிகளிலோ அல்லது தண்ணீரில் விழுந்தாலோ இந்த பசை கரையாது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment