Friday, October 15, 2010

பு‌ண்களை குணமா‌க்க


பாகற்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வர, வயிற்றில் உள்ள பூச்சிகள் அழியும்.
தேங்காய் பாலுடன் தேன் கலந்து குடிக்க, வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண் ஆறும்.
மணத்தக்காளி கீரையை அடிக்கடி சாப்பிட்டு வர வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.
அகத்திக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர, குடல் புண்கள் குணமாகும். வாரம் ஒரு முறை உண்பதால், வயிற்றில் காணப்படும் புழுக்கள் அழியும்.
வேப்ப எண்ணெயை காய்ச்சி, சேற்றுப்புண் உள்ள இடங்களில் தட‌விவ‌ந்தா‌ல் குணம் கிடைக்கும்.
விளக்கெண்ணெயில் மஞ்சள் தூளைக் குழைத்து, சேற்றுப் புண்களில் தட‌வினா‌ல் ‌தீ‌ர்வு கிடைக்கும்.

No comments:

Post a Comment