Friday, October 15, 2010

உறவைத் தூண்டும் முத்தம்


காதல் ஸ்பரிசங்களில் பரிமாறப்படும் முக்கிய செயல் முத்தம். ஒரு தாய், தன் குழந்தைக்கு கொடுக்கும் முத்தத்திற்கும், ஒரு கணவன் தன் மனைவிக்கு கொடுக்கும் முத்தத்திற்கும், ஒரு காதலன் காதலிக்கு கொடுக்கும் முத்தத்திற்கும் நிறையவே வித்தியாசங்கள் உண்டு.
முத்தத்தின் வெளிப்பாடு என்பது அன்பின் பரிமாற்றம்தான் என்றாலும், அதை கொடுக்கிறவர்களை பொறுத்தும், வாங்கிக்கொள்கிறவர்களை பொறுத்தும் மாறுபடுகிறது.
தாய் மகனுக்கு கொடுக்கும் முத்தம் பாசம் மட்டுமே கொண்டது. கணவன் மனைவிக்கு கொடுக்கும் முத்தத்தில் பாசத்துடன், காமமும் சேர்ந்தே இருக்கும். ஆனால், காதலர்களுக்குள் இந்த முத்தம் பரிமாறிக்கொள்ளபடும்போது இந்த அன்பு, காமத்துடன் இன்னொன்றும் வந்து சேர்கிறது. அதுதான் எதிர்பார்ப்பு.
துணை அடுத்து என்ன செய்யபோகிறான் அல்லது என்ன செய்யபோகிறாள் என்ற எதிர்பாரப்பு காதலர்களுக்குள் இருப்பதால், அவர்கள் பரிமாறிக்கொள்ளும் முத்தத்தில் இனம் புரியாத ஈர்ப்பு இருக்கிறது.
இப்போதெல்லாம், முத்தத்தை எப்படி கொடுத்தால் `கிக்` அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சிகளே நடத்தபடுவதால், பல வகையிலான முத்தங்கள் தோன்றிவிட்டன.
காமசூத்ராவை தந்த வாத்சாயனாரின் `டிப்ஸ்’களையே அந்த முத்தங்கள் மிஞ்சிவிட்டன. அதற்கு சிறந்த உதாரணம் உதட்டோடு உதடு கவ்வும் `பிரெஞ்சு கிஸ்’.
இந்த முத்தத்தின்போது என்னென்ன மாற்றங்கள் இருவரது உடலுக்குள்ளும் நிகழ்கின்றன என்று ஒரு ஆய்வு மேற்கொண்டார்கள்.
பாலுறவின்போது ஆண் பெண் இருவரும் அடையும் உச்சக்கட்டத்தை, இந்த முத்தத்தை பரிமாறிக்கொள்ளும்போதும் அடையலாம் என்பதை நி ருபித்தது, அமெரிக்காவில் நடத்தபட்ட அந்த ஆய்வு.
அந்த ஆழமான முத்தத்தை பரிமாறும்போது, அதை பரிமாறும் ஆண் பெண் இருவரது பால் சுரப்பிகளும் தூண்டபடுவது அப்போது தெரிய வந்தது.பிரெஞ்சு கிஸ் இதழ்களோடு நின்று விடுவதில்லை; மோகத் தீ பலமாக வீசி, இருவரது உடல்களும் பின்னி பிணைந்து விடுகின்றன. இன்றைய இளசுகள் இந்த முத்தத்தைத்தான் துணையிடம் விரும்புகிறார்களாம்.
பிற நாட்டினரைக் காட்டிலும் பிலிப்பைன்ஸ் காதலர்கள், நம்மவர்கள் காதலுக்கு மரியாதை செய்வதுபோல் முத்தத்திற்கு தனி மரியாதை கொடுக்கிறார்கள்.
அவர்களுக்குள் காதல் தோல்வி ஏற்படும்போதும் கூட, அந்த முத்தத்திற்கு ஒரு அங்கீகாரம் கொடுக்கிறார்கள். அதாவது, காதலியானவள் தனது உள்ளாடையையும், காதலன் அவனது உள்ளாடையையும் அவர்களுக்குள் பரிமாறிக்கொண்டு பிரிந்து விடுகிறார்கள். அதன்பின்னர், இருவரும் சந்தித்துக் கொள்வதே இல்லை.
அதேநேரம், காதலி அல்லது காதலன் பற்றி எண்ணம் வரும்போதெல்லாம், அவள் அல்லது அவன் கொடுத்த உள்ளாடையை முத்தமிட்டு, தங்களது மனபாரத்தை இறக்கிக் கொள்கிறார்களாம்.
காமசூத்ராவை தந்த வாத்சாயனார் கூட, முத்தத்தை பற்றி அழகாக வர்ணிக்கிறார். “உணர்ச்சிகளின் எல்லையைத் தாண்டிய அவள், சடை இட்டுக்கொள்வதுபோல் அவனது தலை முடியை பற்றி இழுத்து, முகத்தோடு முகம் வைத்து, அவனது கீழ் உதட்டில் முத்தமிடுகிறாள். சித்தபிரமை கொண்டவள்போல் அவனது உடம்பெங்கும் கடித்துக் கொள்கிறாள். இந்த நேரத்தில் அவளது கண்கள் முடியிருக்கும்…” என்று, காதல் பாடம் சொல்லிக்கொண்டே போகிறார் வாத்சாயனார்.
பொதுவாக சொல்வது என்றால்… ஒவ்வொரு நாட்டினர் இடையேயும் முத்தம் வேறு வேறு வழிகளில் கையாளபடுகிறது.
பயன்படுத்தும் வழிகள் பலவாக இருந்தாலும், அந்த முத்தத்தால் கிடைக்கும் சுகம்-பரவசம் எல்லாம் ஒன்றாகவே இருக்கிறது.

No comments:

Post a Comment