
மிக அரிய உயிரினமாக கருதப்படும் சிங்கவால் குரங்குகளின் (லங்கூர்) மாமிசத்தை, இந்தோனேசிய நாட்டு மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். இந்தோனேசியாவில் ஜாவா தீவில் பலூரன் தேசிய பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் தான் இந்த அரிய வகை குரங்குகள் அதிகம் வசிக்கின்றன. மெல்ல அழிந்து வரும் இந்த குரங்குகளை வேட்டையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் சிலர், இந்த குரங்குளை வேட்டையாடி பிடிக்கின்றனர். பிறகு, அதை துண்டு, துண்டாக வெட்டி, மாமிசமாக விற்கின்றனர். சமீபத்தில் இந்த குரங்கு மாமிசத்தை விற்ற சிலரைகைது செய்தனர் இந்தோனேசிய போலீசார். அவர்களிடம் இருந்து குரங்கு மாமிச துண்டுகள், துப்பாக்கிகள், லங்கூர் குரங்குகளை கைப்பற்றினர். “ஆடு, மாடு, கோழி, பன்றி மாமிசங்களின் விலை அதிகமாக உள்ளது. எனவே, குரங்குகளை வேட்டையாடி, மாமிசமாக விற்கிறோம்; அதற்கு, நல்ல கிராக்கியும் உள்ளது!’ என்கின்றனர் பிடிபட்டவர்கள். குரங்கு மாமிசத்தில் இருந்து, “பக்சோ’ என்ற சூப் தயாரிக்கப்படுகிறது. இந்தோனேசிய மக்களின் மிகவும் விருப்பமான சூப் இதுதான். உடல் ஆரோக்கியத்திற்கும், ஆண்மைக்கும் இந்த சூப் மிகவும் நல்லது என நம்புகின்றனர். காட்டு விலங்குகளை வேட்டையாடினால், ஐந்து ஆண்டு வரை சிறைத் தண்டனை உண்டு என்கிறது இந்தோனேசிய சட்டம்; ஆனால், இந்த சட்டத்தை யாரும் மதிப்பதே இல்லை. போலீசாரும் எப்போதாவது வழக்கு போடுவதோடு சரி. எனவே, குரங்கு வேட்டை இங்கு மிக அமோகமாக உள்ளது. இப்படியே போனால், லங்கூர் குரங்குகளை மிருக காட்சி சாலையில் கூட பார்க்க முடியாது.
No comments:
Post a Comment