Sunday, October 10, 2010

உயிர்களைக் கொன்று , தோலை உரித்தெடுத்து..

உயிர்களைக் கொன்று , தோலை உரித்தெடுத்து...

இந்தப் படங்கள் உங்களுக்கு அதிர்ச்சியையும், அருவருப்பையும் ஒரு சேர அளிக்கக்கூடியன. இதன் ஆரம்ப நிலை உங்களை முகம்சுழிக்க வைப்பதாக இருப்பினும் கூட , இறுதி நிலையில் நீங்கள் கூட பெரு விருப்பத்துடன் உங்களோடு சேர்த்தணைத்துக் கொள்ளும் ஒன்றாக இவை இருக்கக் கூடும். இனி படங்களைச் சற்றுப் பார்ப்போம்.

 
பாம்புகள், முதலைக் குட்டிகள் இதற்கென்றே பிடித்துவரப்பட்டுக் கொல்லப்படுகின்றன
 
மிகவும் கவனமாகத் தோல் உரித்து வேறாக்கப்படுகிறது

அப்பாவி ஜீவன்களென பாம்பு, முதலை போன்றவற்றைச் சொல்ல முடியாதுதான். எனினும் இப் பூமியில் வாழும் உரிமை நமக்கிருப்பதைப் போலவே அவற்றுக்கும் இருக்கிறதுதானே ?
மனிதனின் அற்பமான பேராசைகளுக்கும், அந்தஸ்துக்காக வேண்டியும் இவை போலப் பல உயிர்கள் தினந்தோறும் நாம் அறிந்த விதத்திலும், அறியாப்பக்கங்களிலும் பலியாகிக் கொண்டே இருக்கின்றன.
 
இவ் உயிர்களின் தோல்களால் உருப்பெறும் செருப்புக்கள், தோற்பைகள், கைப்பைகள், தோலாடைகள், தோல் பொருட்கள் எனப் பலவற்றுக்கு புராதன காலம்தொட்டு இன்றைய நவீன காலம்வரை சமூகத்தில் பாரிய வரவேற்பு இருந்துகொண்டே இருக்கின்றது. 
இவ்வாறாகத் தங்கள் உயிர் கொடுத்து, உங்கள் அந்தஸ்த்தை உயர்த்தும் பொருட்களை இனி நீங்கள் பாவனைக்கென எடுக்கும் போதெல்லாம் ஒரு உயிரின் கதறல் உங்கள் காதுகளில் கேட்கட்டும் !

No comments:

Post a Comment