Thursday, December 9, 2010

தீர்த்த கரையில் கோயில் அமைக்கவேண்டுமா?


கோயில் கட்ட வேண்டிய முறையைக் குறித்து தெளிவான ஆசாரிய விதிகள் உள்ளன. ஆத்மிகமாக ஒதுங்கியுள்ள இந்த விதிகளில் நவீன சாஸ்திர அடிப்படையிலும் பயன் உள்ளதாக அயல் நாட்டினர் புரிந்து கொண்டதால் இவைகளைப் பின்பற்றினர். தீர்த்தங்கரையிலோ, நதி கரையிலோ, கடலோரத்திலோ கோயில் கட்ட வேண்டும். நதிகள் சேருமிடத்தும், மலையடிவாரத்திலும், குன்றுகளிலும், கோயில் அமைக்கலாம். காடுகளிலும் கிராமத்திலுள்ள சிறுகாடுகளிலும், சந்நியாசிகளின் ஆசிரமத்திலும், மக்கள் வசிக்கும் கிராமத்திலும், தலைநகரத்திலும், பட்டணங்களிலும் ஐசுவரியம் நிறைந்த பிற இடங்களிலும் ஆசாரியர்கள் மேற்பார்வையில் கோயில்கள் அமைக்கலாம்.

No comments:

Post a Comment